Posts

Showing posts from October, 2014

கவிதையாக மாறிக் கொண்டிருக்கிறது மனது

நாளுக்கு நாள் பெருகிக் கொண்டுதான் இருக்கிறது குறைந்தபாடில்லை . வயதைப் போல சுமைகளும் .. ஆனாலும் நம்பிக்கையிருக்கிறது . கவலை மறக்க கண்ணீர் துடைக்க .. அவ்வபோது இந்த மாதிரியான கவிதைகளும் சில நட்பு வட்டங்களும் .. வாழ்க்கையை அழகாக்க ... ” மனம் காற்றாய் மாறி சுதந்திரத்தை அனுபவிக்கிறது ” இந்தக் கவிதையை படிக்கையில் ... " பேசும் பார் என் கிளி " - என்றான் கூண்டைக் காட்டி . வாலில்லை . வீசிப் பறக்கச் சிறகில்லை . வானம் கைப் பட வழியில்லை . " பேசும் ! இப்போது பேசும் என மீண்டும் மீண்டும் அவன் சொல்ல ... " பறவையென்றால் " பறப்பதெனும் பாடம் முதலில் படியென்றேன் .                     - கல்யாண்ஜி .