Tuesday, November 26, 2013

இரவு நீண்ட நேரமாகிவிட்டது.இப்பொழுதெல்லாம் காதல் படங்களைதான் பார்க்கபிடிக்கிறது,காதல் பாடல்களைதான் கேட்க பிடிக்கிறது மனம் காதலால் நிரம்பி வழியும் போது அப்படிதான் நினைக்க தோன்றும் போலிருக்கிறது.டேபிளின் மேலிருக்கும் லேப்டாப்பில் ”நீதானே என் பொன்வசந்தம்” ஓடிக்கொண்டிருக்கிறது.அதில் சமந்தாவின் கியூட்டான பெர்ப்பாமன்ஸை பார்த்து வியந்து கொண்டிருக்கிறேன்.அழகுக்கு அழகு சேர்ப்பதுபோல சமந்தாவின் பின்னணி குரல் பிண்ணி எடுக்கிறது ஒரு கரகரப்பு கலந்த காமம் தெளிக்கும் குரல் அசத்தல்.மொத்தத்தில் அன்றைய இரவு நான் காலியாகிப் போனேன்.