Monday, October 13, 2014

கவிதையாக மாறிக் கொண்டிருக்கிறது மனது


நாளுக்கு நாள் பெருகிக் கொண்டுதான் இருக்கிறது குறைந்தபாடில்லை.
வயதைப் போல சுமைகளும்..
ஆனாலும் நம்பிக்கையிருக்கிறது.

கவலை மறக்க கண்ணீர் துடைக்க..
அவ்வபோது இந்த மாதிரியான கவிதைகளும்
சில நட்பு வட்டங்களும்..
வாழ்க்கையை அழகாக்க...

மனம் காற்றாய் மாறி
சுதந்திரத்தை அனுபவிக்கிறது

இந்தக் கவிதையை படிக்கையில்...


"பேசும் பார் என் கிளி" -என்றான்
கூண்டைக் காட்டி.
வாலில்லை.
வீசிப் பறக்கச் சிறகில்லை.
வானம் கைப் பட வழியில்லை.

"பேசும்! இப்போது பேசும் என
மீண்டும் மீண்டும் அவன் சொல்ல...

"பறவையென்றால்
"பறப்பதெனும்
பாடம் முதலில் படியென்றேன்.


                    -கல்யாண்ஜி.